WELCOME TO PARK OF VEDANTA - THE UPANISHADS
உபநிஷதம் - ஒரு அறிமுகம்
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தன் சுகம் பற்றிய அவனது வேட்கையும் தொடங்கிவிட்டது. தன் உடலுக்கும் உள்ளத்திற்கும் சுகம் ஒன்றே வேண்டும் என்ற அவனது நாட்டம் ‘மரணம்’ என்ற ஒன்றில் தடுமாறியது. எவ்வளவு உழைத்தாலும்,சிந்தித்தாலும்,வலிமை பெருக்கினாலும் இந்த மரணத்தின் முன் அவன் தோற்றுப் போனான்.
‘மரணத்தை வெல்வது எப்படி?’ ‘மரணமற்று இருப்பது எப்படி?’ என்ற கேள்விகள் அவனை அலைகழித்தன. மரணிக்கும் வரை சுகமாயிருக்கவும்,மரணத்தை வெல்லும் வழிகளை ஆராய்வதும் உலகெங்கும் நடந்தன. மற்ற பல பகுதிகளில் இந்தத் தேடல் வெளிப்புறமாக நடந்தது. வெளிப்புற வசதிகளை அதிகப்படுத்துவதும்,இந்த பிரபஞ்சத்திற்கான ஆதாரத்தைப் பிரபஞ்சம் முழுவதும் தேடுவதுவதான அந்த முயற்சிகளுக்கு ‘விஞ்ஞானம்’ என்று பெயர். இந்த முயற்சியால் பல்வேறு புறக்கருவிகள் கிடைத்தன. சரித்திரம் ஆராயப்பட்டது. பூகோளமும்,இயற்பியலும்,வானியலும்,வேதியியலும் ஆக இவ்வாறு பல கிளைகள் தோன்றி விரிந்தன.
ஆதிகாலத்தில் ஒரு பேரரசனுக்குக் கூட கிடைத்திராத பல்வேறு வாழ்க்கை வசதிகள் இந்த காலத்தில் சாதாரன மனிதனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால்,தேடல் முடிவு பெறவில்லை. விஞ்ஞானம் வளர வளர அறியாமையின் பரப்பும் விரிந்து கொண்டே போகிறது. ஆராய்ச்சிகளும் இலக்கைத் தொடவில்லை. மனிதன் தன் வாழ்க்கையில் அமைதியையும் ஆனந்தத்தையும் தொடவுமில்லை. ஆனந்தத்தையும் அமைதியையும் தேடுகின்ற அவனது ஓட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாரத நாட்டில் இந்த ஆராய்ச்சி உள்முகமாக நடந்தது. அண்ட வெளியில் உள்ளவை யாவும் நம் உள்ளேயும் இருப்பதை உணர்ந்த நம் ஞானிகள் இந்த உள்முக பயனத்தை நடத்தினார்கள். அறுதி பேருண்மையை,ஆதார சக்தியை நம் ஞானிகள் கண்டு கொண்டார்கள். எந்த பேருண்மையை அறிவதால் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் வருமோ,மரணத்தை வென்று நிற்க முடியுமோ அந்த பேருண்மையை நம் நாட்டு ஞானிகள் அறிந்து கொண்டார்கள்.
விஞ்ஞானிகள், தாம் கண்டறிந்த உண்மைகளை, தாம் உருவாக்கிய பொருட்களை எல்லா மனிதர்களும் உணரவும்,உருவாக்கவுமான வழிவகைகளை எப்படி விஞ்ஞான சூத்திரங்களாக உலகிற்கு விட்டுச் சென்றார்களோ அப்படியே நம் நாட்டு ஞானிகளும் தாம் கண்டறிந்த உண்மைகளை அறிவித்தார்கள். அந்த பேருண்மையை ஒவ்வொரு மனிதனும் உணர்வதற்காக பல்வேறு பாதைகளைக் காட்டினார்கள்.
உலகின் பெரும்பாலான பகுதிகள் இந்த உள்முகப்பாதையைப்பற்றிய அறியாமையில் மூழ்கியிருக்க,நம் ஞானிகள் “ச்ருணுவந்து விஸ்வா,அம்ருதஸ்ய புத்ரா” – அழிவற்ற ஆனந்தத்தின் தவப்புதல்வர்களே கேளுங்கள் - என்று இந்த உலகிற்கு அறைக்கூவல் விடுத்து,மனிதன் தன் மூலத்தை அறிந்தால் மட்டுமே மரணமற்ற பெருவாழ்வு வாழ முடியும் என்று அறிக்கை விட்டார்கள்.
இங்கே ஆனந்தம் எனக்குறிக்கப்படுவது ‘மகிழ்ச்சி’ அல்ல. அது சமத்தன்மை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மகிழ்ச்சியும் துக்கமும் பிரிக்க முடியாத இரட்டைகள். இரண்டையும் கடந்த சமத்தன்மையே ஆனந்தம் எனப்படும்.
மனிதனின் மூலம் எது? பிறப்பிற்கு முன்னும்,இறப்பிற்குப் பின்னரும் என்ன நடக்கிறது? இந்த கேள்விகளுக்கு விடையளித்ததோடு அந்த விடைகளை ஒவ்வொரு மனிதனும் தானே அனுபவித்து அறிந்து கொள்ள பல்வேறு வழிகளைக் கொடுத்தார்கள். அவற்றிற்கு ‘வேதம்’ அதாவது ‘அறிவு’ என்று பெயர். பாரத நாட்டில் ‘அறிவு’ என்றாலே ‘ஆன்மீக அறிவு’ என்றே பொருள்பட்டது வேதகாலத்தில். பிரபஞ்சத்தின் மூலத்தை அறிவது மட்டுமே ‘ஞானம்’ எனப்பட்டது. அந்த பேருன்மையைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றிய அனைத்தையும் ‘சாதாரண அறிவு’ என்கின்றன இந்த வேதங்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக,பல ஞானியர் வெளியிட்டவைகளின் தொகுப்பே வேதம். அந்த வெளியீடுகள் வேத வியாசரால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டன. அவை அவற்றின் அமைப்பைப் பொறுத்து நான்காக வகுக்கப்பட்டன.
இயற்பியலின் தேடல் சக்திக்கான மூலம். அந்த ஆதார சக்தியை கண்டுவிட்டால் இயற்பியலின் தேடல் முற்று பெறும். உயிரின் மூலத்தை அறிய முடிந்தால் உயிரியலின் தேடல் நின்று போகும். அதே போல் பிரபஞ்சத்தின் ஆதார சக்தியைத் தேடும் ஆன்மீகத்தேடல்,அந்த ஆதாரத்தை அடைந்து,தான் தெளிந்த அந்த முடிவை வெளியிட்டிருப்பதுதான் ‘வேதாந்தம்’
விஞ்ஞானம் எங்கே முற்றுபெறுகிறதோ,அங்கேதான் மெய்ஞானம் துவங்குகிறது. விஞ்ஞானம் தேடிக்கொண்டிருக்கும் பல விஷயங்களை மெய்ஞானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருக்கிறது.
உபநிஷதங்கள்,அந்த பேருண்மையை பல்வேறு கோணங்களில் ஆராய்கின்றன. அந்த பேருண்மையை அனுபவமாக உணர பல வழிகளைக் காட்டுகின்றன.
உபநிஷதம் என்றால் பிரம்மத்தைப் பற்றிய அறிவு என்பதும் ஒரு பொருள். பிரபஞ்சத்தின் மூலத்திற்கு பிரம்மம் என்று பெயர். பிரபஞ்சம் உருவான விதத்தை இவை அற்புதமாக விளக்குகின்றன.
பல உபநிஷதங்கள் இருந்தாலும்ää; 14 உபநிஷதங்கள் மிக முக்கியமானவையாகும். இந்த பதினான்கு உபநிஷதங்களும் நான்கு வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றுள் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரின் உரைகள் உள்ளன. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷதங்கள் வேதங்களில் உண்டு.
உபநிஷதம் என்றால் ‘இரகசிய அறிவு’ என்றும் ஒரு பொருள் உண்டு. பல உபநிஷதங்களில் ‘இந்த உபநிஷதத்தை அறிந்தவன் .....’ என்ற சொற்றொடரைக் காணலாம். இங்கு ‘அறிந்தவன்’ என்பது ஏட்டில் படித்து அறிந்தவன் என்ற பொருளில் அல்ல. ஆன்மீக சாதனைகளின் மூலம் இந்த கருத்துக்களை தன் அனுபவமாக அடைந்தவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
உபநிஷதங்களுக்கான இந்த உரைகளின் நோக்கம் அவற்றின் வீச்சு மற்றும் ஆழத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல. அந்த உபநிஷதங்கள் காட்டும் பல பாதைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,தொடர்ந்த சாதனைகளின் மூலம் ஒவ்வொருவரும் ஞானமடைய வேண்டும் என்பதே.
இந்த முன்னுரையோடு ‘உபநிஷதம்’ என்ற சோலைக்குள் நுழைவோம்.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே தன் சுகம் பற்றிய அவனது வேட்கையும் தொடங்கிவிட்டது. தன் உடலுக்கும் உள்ளத்திற்கும் சுகம் ஒன்றே வேண்டும் என்ற அவனது நாட்டம் ‘மரணம்’ என்ற ஒன்றில் தடுமாறியது. எவ்வளவு உழைத்தாலும்,சிந்தித்தாலும்,வலிமை பெருக்கினாலும் இந்த மரணத்தின் முன் அவன் தோற்றுப் போனான்.
‘மரணத்தை வெல்வது எப்படி?’ ‘மரணமற்று இருப்பது எப்படி?’ என்ற கேள்விகள் அவனை அலைகழித்தன. மரணிக்கும் வரை சுகமாயிருக்கவும்,மரணத்தை வெல்லும் வழிகளை ஆராய்வதும் உலகெங்கும் நடந்தன. மற்ற பல பகுதிகளில் இந்தத் தேடல் வெளிப்புறமாக நடந்தது. வெளிப்புற வசதிகளை அதிகப்படுத்துவதும்,இந்த பிரபஞ்சத்திற்கான ஆதாரத்தைப் பிரபஞ்சம் முழுவதும் தேடுவதுவதான அந்த முயற்சிகளுக்கு ‘விஞ்ஞானம்’ என்று பெயர். இந்த முயற்சியால் பல்வேறு புறக்கருவிகள் கிடைத்தன. சரித்திரம் ஆராயப்பட்டது. பூகோளமும்,இயற்பியலும்,வானியலும்,வேதியியலும் ஆக இவ்வாறு பல கிளைகள் தோன்றி விரிந்தன.
ஆதிகாலத்தில் ஒரு பேரரசனுக்குக் கூட கிடைத்திராத பல்வேறு வாழ்க்கை வசதிகள் இந்த காலத்தில் சாதாரன மனிதனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால்,தேடல் முடிவு பெறவில்லை. விஞ்ஞானம் வளர வளர அறியாமையின் பரப்பும் விரிந்து கொண்டே போகிறது. ஆராய்ச்சிகளும் இலக்கைத் தொடவில்லை. மனிதன் தன் வாழ்க்கையில் அமைதியையும் ஆனந்தத்தையும் தொடவுமில்லை. ஆனந்தத்தையும் அமைதியையும் தேடுகின்ற அவனது ஓட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாரத நாட்டில் இந்த ஆராய்ச்சி உள்முகமாக நடந்தது. அண்ட வெளியில் உள்ளவை யாவும் நம் உள்ளேயும் இருப்பதை உணர்ந்த நம் ஞானிகள் இந்த உள்முக பயனத்தை நடத்தினார்கள். அறுதி பேருண்மையை,ஆதார சக்தியை நம் ஞானிகள் கண்டு கொண்டார்கள். எந்த பேருண்மையை அறிவதால் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் வருமோ,மரணத்தை வென்று நிற்க முடியுமோ அந்த பேருண்மையை நம் நாட்டு ஞானிகள் அறிந்து கொண்டார்கள்.
விஞ்ஞானிகள், தாம் கண்டறிந்த உண்மைகளை, தாம் உருவாக்கிய பொருட்களை எல்லா மனிதர்களும் உணரவும்,உருவாக்கவுமான வழிவகைகளை எப்படி விஞ்ஞான சூத்திரங்களாக உலகிற்கு விட்டுச் சென்றார்களோ அப்படியே நம் நாட்டு ஞானிகளும் தாம் கண்டறிந்த உண்மைகளை அறிவித்தார்கள். அந்த பேருண்மையை ஒவ்வொரு மனிதனும் உணர்வதற்காக பல்வேறு பாதைகளைக் காட்டினார்கள்.
உலகின் பெரும்பாலான பகுதிகள் இந்த உள்முகப்பாதையைப்பற்றிய அறியாமையில் மூழ்கியிருக்க,நம் ஞானிகள் “ச்ருணுவந்து விஸ்வா,அம்ருதஸ்ய புத்ரா” – அழிவற்ற ஆனந்தத்தின் தவப்புதல்வர்களே கேளுங்கள் - என்று இந்த உலகிற்கு அறைக்கூவல் விடுத்து,மனிதன் தன் மூலத்தை அறிந்தால் மட்டுமே மரணமற்ற பெருவாழ்வு வாழ முடியும் என்று அறிக்கை விட்டார்கள்.
இங்கே ஆனந்தம் எனக்குறிக்கப்படுவது ‘மகிழ்ச்சி’ அல்ல. அது சமத்தன்மை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மகிழ்ச்சியும் துக்கமும் பிரிக்க முடியாத இரட்டைகள். இரண்டையும் கடந்த சமத்தன்மையே ஆனந்தம் எனப்படும்.
மனிதனின் மூலம் எது? பிறப்பிற்கு முன்னும்,இறப்பிற்குப் பின்னரும் என்ன நடக்கிறது? இந்த கேள்விகளுக்கு விடையளித்ததோடு அந்த விடைகளை ஒவ்வொரு மனிதனும் தானே அனுபவித்து அறிந்து கொள்ள பல்வேறு வழிகளைக் கொடுத்தார்கள். அவற்றிற்கு ‘வேதம்’ அதாவது ‘அறிவு’ என்று பெயர். பாரத நாட்டில் ‘அறிவு’ என்றாலே ‘ஆன்மீக அறிவு’ என்றே பொருள்பட்டது வேதகாலத்தில். பிரபஞ்சத்தின் மூலத்தை அறிவது மட்டுமே ‘ஞானம்’ எனப்பட்டது. அந்த பேருன்மையைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றிய அனைத்தையும் ‘சாதாரண அறிவு’ என்கின்றன இந்த வேதங்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக,பல ஞானியர் வெளியிட்டவைகளின் தொகுப்பே வேதம். அந்த வெளியீடுகள் வேத வியாசரால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டன. அவை அவற்றின் அமைப்பைப் பொறுத்து நான்காக வகுக்கப்பட்டன.
இயற்பியலின் தேடல் சக்திக்கான மூலம். அந்த ஆதார சக்தியை கண்டுவிட்டால் இயற்பியலின் தேடல் முற்று பெறும். உயிரின் மூலத்தை அறிய முடிந்தால் உயிரியலின் தேடல் நின்று போகும். அதே போல் பிரபஞ்சத்தின் ஆதார சக்தியைத் தேடும் ஆன்மீகத்தேடல்,அந்த ஆதாரத்தை அடைந்து,தான் தெளிந்த அந்த முடிவை வெளியிட்டிருப்பதுதான் ‘வேதாந்தம்’
விஞ்ஞானம் எங்கே முற்றுபெறுகிறதோ,அங்கேதான் மெய்ஞானம் துவங்குகிறது. விஞ்ஞானம் தேடிக்கொண்டிருக்கும் பல விஷயங்களை மெய்ஞானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருக்கிறது.
உபநிஷதங்கள்,அந்த பேருண்மையை பல்வேறு கோணங்களில் ஆராய்கின்றன. அந்த பேருண்மையை அனுபவமாக உணர பல வழிகளைக் காட்டுகின்றன.
உபநிஷதம் என்றால் பிரம்மத்தைப் பற்றிய அறிவு என்பதும் ஒரு பொருள். பிரபஞ்சத்தின் மூலத்திற்கு பிரம்மம் என்று பெயர். பிரபஞ்சம் உருவான விதத்தை இவை அற்புதமாக விளக்குகின்றன.
பல உபநிஷதங்கள் இருந்தாலும்ää; 14 உபநிஷதங்கள் மிக முக்கியமானவையாகும். இந்த பதினான்கு உபநிஷதங்களும் நான்கு வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றுள் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரின் உரைகள் உள்ளன. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷதங்கள் வேதங்களில் உண்டு.
உபநிஷதம் என்றால் ‘இரகசிய அறிவு’ என்றும் ஒரு பொருள் உண்டு. பல உபநிஷதங்களில் ‘இந்த உபநிஷதத்தை அறிந்தவன் .....’ என்ற சொற்றொடரைக் காணலாம். இங்கு ‘அறிந்தவன்’ என்பது ஏட்டில் படித்து அறிந்தவன் என்ற பொருளில் அல்ல. ஆன்மீக சாதனைகளின் மூலம் இந்த கருத்துக்களை தன் அனுபவமாக அடைந்தவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
உபநிஷதங்களுக்கான இந்த உரைகளின் நோக்கம் அவற்றின் வீச்சு மற்றும் ஆழத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல. அந்த உபநிஷதங்கள் காட்டும் பல பாதைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,தொடர்ந்த சாதனைகளின் மூலம் ஒவ்வொருவரும் ஞானமடைய வேண்டும் என்பதே.
இந்த முன்னுரையோடு ‘உபநிஷதம்’ என்ற சோலைக்குள் நுழைவோம்.
குறிப்பு: இந்த நூல்கள் யாவும் காப்புரிமை பெற்றவை. இவற்றை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். எங்கு எவ்வாறு (வணிக நோக்கமின்றி) பயன்படுத்தினாலும் இந்த ஆசிரியர் பெயர் மற்றும் வலைதள விவரங்களை அவசியம் குறிப்பிடவேண்டும்.
PLEASE CLICK AND DOWNLOAD THIS PDF FILE FOR AN INTRODUCTION TO UPANISHADS IN TAMIL TEXT
|
|
|
|
ஈஸா_உபநிஷதம்.pdf | |
File Size: | 599 kb |
File Type: |
|
|
|
|